search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் நடவு பணியில் ஈடுபட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்
    X

    நெல் நடவு பணியில் ஈடுபட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்

    • மரக்கன்றுகளை வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே தேசிய விவசாய தினம் முன்னிட்டு விவசாய நிலத்தில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் நேற்று நெல் நடவு செய்து மரக்கன்றுகளை வழங்கினர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளானேரி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புள்ளானேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி சரவணன் நிலத்தில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் தேசிய விவசாய தினம் முன்னிட்டு விவசாய நிலத்தில் நெல் நடவு செய்து மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் புள்ளானேரி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை அலுவலர் அருள், கிராம நிர்வாக அலுவலர் அருணா, உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் விவசாய பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×