46 ஆண்டுக்கு பிறகு ஏரிகள் நிரம்பியது

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மலர் தூவி வரவேற்பு மேளதாளத்துடன் ஊர்வலம் நடந்தது
ஏரியில் மலர் தூவி வரவேற்ற காட்சி.
ஏரியில் மலர் தூவி வரவேற்ற காட்சி.
Published on

திருப்பத்தூர்:

கந்திலி ஒன்றியத்தில்250 ஏக்கர் பரப்பளவில் உள்ள குனிச்சி, லக்கிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி தண்ணீர் வழிந்து வருகிறது.

இதனை ஒட்டி அந்த பகுதி பொதுமக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து ஆடு வெட்டி பூஜை செய்து மழை தூவ நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் சாந்தகுமார் தலைமை வகித்தார் சி.என். அண்ணாதுரை எம்.பி, நல்லதம்பி எம்.எல்.ஏ., பூஜை செய்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கே. ஏ. குணசேகரன், முருகேசன், கே. எஸ். ஏ. மோகன்ராஜ், ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் துணைத்தலைவர் ஜி.மோகன் குமார் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

ஏரிகள் நிரம்பியதற்காக ஆடு வட்ட பொதுமக்கள் முயன்றபோது ஆடுகளை வெட்டக்கூடாது எம்பி எம்எல்ஏ தடுத்தனர். அவர்கள் சென்றவுடன் ஆடு வெட்டி பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com