என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏரி நிரம்பியதையொட்டி ஏரியில் ஆடு வெட்டி பொதுமக்கள் கொண்டாடினர்.
29 ஆண்டுகளுக்கு பிறகு கந்திலி ஏரி நிரம்பியது
- பூஜை செய்து, ஆடு வெட்டி பொதுமக்கள் கொண்டாட்டம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மழை தொடர்ந்து பெய்து வருவதால் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், நிரம்பி வருகிறது.
இதனை ஒட்டி திருப்பத்தூர் அருகே உள்ள கந்திலி ஊராட்சி ஒன்றிய கந்திலி ஏரி 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த ஏரி கடந்த 29 ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்தது கடந்த முறை பெய்த மழையில் கூட ஏரி நிரம்ப வில்லை தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது.
இதன் காரணமாக நேரில் இருந்து உபரி வெளியேறுகிறது இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, தலைமையில் ஏரியில் பூஜை செய்து மலர் தூவி ஆட்டுக்கிடா வெட்டி பிரியாணி சமைத்து ஊருக்கு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் ஜெகதீசன், ஜோதி, இளங்கோ, குமார், கருணாநிதி, அன்சர், கிஷோர், தண்டபாணி, தமிழகுமார், மற்றும் ஊர் நாட்டாண்மை பெருமாள், துணை தலைவர் உஸ்மான், மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.






