என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
ஆம்பூர்:
ஆம்பூர் தாலுகா பெரியவரிகம் கிராமத்தை சேர்ந்த கீர்த்திகா கர்ப்பிணியான இவர் நரியாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவரை மேல்சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்க இன்று காலை 108 ஆம்புலன்ஸ்க்கு பரிந்துரை செய்தனர். இதை அடுத்து மருத்துவ உதவியாளர் உமா மற்றும் டிரைவர் குமரவேல் ஆகியோர் 108 ஆம்புலன்சில் நரியாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்தனர். அங்கு பிரசவ வலியில் இருந்த கீர்த்திகாவை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு குடியாத்தம் அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தனர்.
மசிகம் அருகே செல்லும் வழியில் கீர்த்திகாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் வேறுவழியின்றி மருத்துவ உதவியாளர் உமா பிரசவம் பார்த்தார். அப்போது அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும் குழந்தையும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்