என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீர் பாட்டிலை கையில் வைத்து சாலையில் அமர்ந்த வாலிபர்
    X

    பீர் பாட்டிலை கையில் வைத்து சாலையில் அமர்ந்த வாலிபர்

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று மாலை பீர் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு திடீரென சாலையில் அமர்ந்து கொண்டார்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியவரை பிடித்து சென்றனர்.

    இது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×