என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பாம்பு கடித்தவர் சிகிச்சைக்காக பைக்கில் சென்ற போது கார் மோதி படுகாயம்
    X

    விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர்.

    பாம்பு கடித்தவர் சிகிச்சைக்காக பைக்கில் சென்ற போது கார் மோதி படுகாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி இவரது மகன் சிவா (வயது21) இவர் நேற்று தனது வீட்டு தோட்டத்தை பராமரித்துக் கொண்டிருந்தார்.

    விஷ பாம்பு ஒன்று அவரை கடித்தது உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மண்டலவாடி கூட்ரோடு அருகே சென்ற போது திருப்பத்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிவா படுகாயமடைந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அவரது சகோதரர் விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த வினோத் (35). என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×