search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரை கல்லால் தாக்கிய 10 பேர் கொண்ட கும்பல்
    X

    வாலிபரை கல்லால் தாக்கிய 10 பேர் கொண்ட கும்பல்

    • வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது
    • 4 பேரை பிடித்து விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.

    சரத்குமார் நேற்று இரவு செட்டியப்பனூர் பகுதியில் அமைந்துள்ள மதுபானக்கடைக்கு சென்றார். அப்போது மதுக்கடையில் இருந்த சிலருடன் சரத்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. இதில் சரத்குமார் ஓடி சென்றுள்ளார்.

    10 பேர் கொண்ட கும்பல் சரத்குமாரை துரத்தி சென்று நியூ டவுன் மேம்பாலம் அருகே கற்களால் பலமாக தாக்கியுள்ளனர். இதில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் 4 பேரை பிடித்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதுமக்கள் அதிகமாக நடமாட்டம் உள்ள பொது இடத்தில் 10 பேர் கொண்ட கும்பல் இளைஞரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×