என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கம்பியை மிதித்து மாடு பலி
    X
    கோப்பு படம்

    மின் கம்பியை மிதித்து மாடு பலி

    • இரவு முதல் தொடர்ந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது
    • மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பிகளை சரி பார்த்தனர்

    ஆம்பூர்

    ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் பெரிய வரிகம் பகுதியில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்தன. இந்த நிலையில் பசு மாடு ஒன்று அந்த வழியாக சென்றது. அப்போது அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக இருந்தது.

    இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த மாட்டை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் மின்சார வாரியம் சார்பாக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பிகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×