search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளைகள் முட்டியதில் 8 பேர் படுகாயம்
    X

    எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளை.

    காளைகள் முட்டியதில் 8 பேர் படுகாயம்

    • எருது விடும் விழா நடந்தது
    • குறைந்த நேரத்தில் சீறிப்பாய்ந்து இலக்கையடைந்த காளைகளுக்கு பரிசு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி வெள்ளைய கவுண்டனூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜி கலந்து கொண்டு எருது விடும் திருவிழாவை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    விழாவில் திருப்பத்தூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம், மிட்டூர், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்றன. குறைந்த நேரத்தில் சீறிப்பாய்ந்து இலக்கையடைந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு விழாவை கண்டு ரசித்தனர். மந்தையில் ஓடி சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 8 பேரை காளைகள் முட்டி படுகாயமடைந்தனர். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு அங்கு இருந்த மருத்துவ குழுவினர் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விழாவில் பாதுகாப்பு கருதி காவல்துறையினர், வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×