search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளை விடும் விழாவில் மாடு முட்டி 16 பேர் காயம்
    X

    காளை விடும் விழாவில் மாடு முட்டி 16 பேர் காயம்

    • 7 காளைகள் பங்கேற்க தடை
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரை அடுத்த ப.முத்தம்பட்டி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார் பேட்டை, வெள்ளக்குட்டை, யர்கூர், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 170 காளைகள் கொண்டு வரப் பட்டிருந்தன. அதில் 7 காளை கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

    எருது விடும் விழாவை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். கந்திலி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.மோகன்ராஜ், அ. தி.மு.க. நகர செயலாளர் டி. டி.குமார், முன்னாள் எம். எல்.ஏ. டி.கே.ராஜா, ரமேஷ், கந்திலி ஒன்றியக்குழு தலை வர் திருமதி கலந்து கொண்ட னர்.

    கோட்டாட்சியர் லட்சுமி, வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர். துணை போலீஸ் சூப்பி ரண்டு கணேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    எருதுகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப் பட்டு சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது இருபுறமும் நின்றி ருந்தவர்கள் காளைகளை உற்சாகப்படுத்தினர்.

    அப்போது காளைகள் முட் டியதில் 16 பேர் காயமடைந்த னர். குறைந்த நேரத்தில் வேக மாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசாக ரூ.77 ஆயிரம் முதல் 40 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், இளை ஞரணியினர், எருது விடும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×