search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே மரக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
    X

    ஆலங்குளம் அருகே மரக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

    • மணி அப்பகுதியில் மரக்கடை நடத்தி வந்தார்.
    • வாழ்வில் வெறுப்படைந்த மணி சம்பவத்தன்று விஷம் குடித்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த கண்ணாடிகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் மணி(வயது 51). இவரது மனைவி சந்திரா(40). மணி அப்பகுதியில் மரக்கடை நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் அவரது வலது கை உடைந்தது. இதனால் அவரால் தொழிலை கவனிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு மஞ்சள்காமாலையால் அவர் மிகவும் பாதிப்படைந்தார். இதனால் வாழ்வில் வெறுப்படைந்த மணி சம்பவத்தன்று விஷம் குடித்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×