என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்தனப்பள்ளி அருகே கிணற்றில் வீசி   குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்
    X

    உத்தனப்பள்ளி அருகே கிணற்றில் வீசி குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்

    • கிணற்றில் குழந்தை மதுமிதா உடன் சந்தியா குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
    • இதில் குழந்தை மதுமிதா பரிதாபமாக இறந்து போனது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள கீரனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பெயிண்டர் தமிழரசன் (வயது 24). இவரது மனைவி சந்தியா (20). கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் மதுமிதா என்ற பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக நேற்று ஊருக்கு பின்புறம் உள்ள வீரபத்திரன் என்பவர் கிணற்றில் குழந்தை மதுமிதா உடன் சந்தியா குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

    இதில் குழந்தை மதுமிதா பரிதாபமாக இறந்து போனது. தகவல் விரைந்து வந்த ராயக்கோட்டை தீயணைப்பு துறையினர் சந்தியாவையும். குழந்தையின் உடலை மீட்டனர் . சந்தியா ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×