என் மலர்
உள்ளூர் செய்திகள்

சொத்து தகராறில் உறவினர்கள் இடையே மோதல்: பெண் உட்பட 3 பேர் கைது
- கிருஷ்ணகிரி அருகே உறவினர்கள் இடையே மோதலில் பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பரம்பரை சொத்து தொடர்பாக முன் விரோதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகேயுள்ள எட்ரபள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). அதே பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் (வயது60) பாலமுருகன் (வயது 40) அவரது மனைவி லெட்சுமிதேவி (வயது36) இவர்கள் 4 பேரும் உறவினர்கள். இவர்களுக்கு இடையே பரம்பரை சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே கடந்த 1ந்தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிருஷ்ணன், பாலமுருகன் இவரது மனைவி லெட்சுமிதேவி ஆகிய 3 பேரும் சேர்ந்து கட்டையாலும், கையாலும் பிரகாஷ்வை தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த பிரகாஷ் இது குறித்து குருபரபள்ளி போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது விசாரித்து வருகின்றனர்.
Next Story






