search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்
    X

    சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்

    • இவ்விருதாளர் தமிழக முதல்வரால் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • 2023ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள், சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் தமிழக முதல்வரால் தேர்வு செய்யப்படுவார்கள்.

    2023ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

    எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயர், பிறந்த இடம் மற்றும் நாள், தாய், தந்தை மற்றும் குடும்ப விவரம், தற்போதைய முகவரி (தொலைபேசி எண்ணுடன்), கல்வி தகுதி, தொழில், சமூக நீதிக்காக பாடுபட்ட விவரம், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூக சீர்த்திருத்தக் கொள்கை குறித்து சிறு குறிப்பு, கலை, இலக்கியம், சமூக பணி ஆகியவற்றில் உள்ள ஈடுபாடு குறித்து சிறு குறிப்பு, பிற விவரங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    2023ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகிற செப்டம்பர் 15ம் தேதி ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×