search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று காலை திருமணம் திருமண மண்டபத்தில் மணமகன் திடீர் மாயம்
    X

    இன்று காலை திருமணம் திருமண மண்டபத்தில் மணமகன் திடீர் மாயம்

    • இவருக்கும் சிதம்பரம் அடுத்த வரகூர்பேட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
    • இன்று காலையில்,மணமகனை காணவில்லை. .

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் மகன் ஜெயக்குமார் (வயது 28). இவர் கடலூர் மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிதம்பரம் அடுத்த வரகூர்பேட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டத அதன்படி சிதம்பரம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முதல்நாள் நடக்கும் பெண் அழைப்பு விழாவிற்கு மணமகன் வீட்டார் அவர்களின் உறவினர்களுடன் நேற்று மாலை வந்தடைந்தனர். பெண் அழைப்பு முடிந்த நிலையில் இன்று நடக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகள் வீட்டார் செய்து வந்தனர். மணமகன் வீட்டார் திருமண மண்டபத்திலேயே தங்கிவிட்டனர் .

    இன்று காலையில் வெகுநேரமாகியும் ரூமை விட்டு மணமகன் வெளியில் வரவில்லை. இதையடுத்து ரூமுக்குள் சென்று பார்த்த போது மணமகனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணமகனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் செய்வதறியாது திகைத்து வந்தனர். முதல்நாள் பெண் அழைப்பில் பங்கேற்று விட்டு, மருநாள் திருமணத்தன்று மணமகன் மாயமான சம்பவம் சிதம்பரம் நகரப் பகுதியில் பரபரப்பை உருவாக்கியது.

    Next Story
    ×