என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பனப்பள்ளி அருகே இன்று காலை   வாழை, தக்காளி தோட்டங்களை  சேதப்படுத்திய காட்டு யானைகள்
    X

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகேயுள்ள தோட்டகவாய் கிராமத்தில் ரமேஷ் என்பவரின் வாழைத் தோட்டத்தை காட்டுயானைகள் சேதப்படுத்தியுள்ளது. அந்த தோட்டத்தை படத்தில் காணலாம்.

    வேப்பனப்பள்ளி அருகே இன்று காலை வாழை, தக்காளி தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

    • 6-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வாழைத் தோட்டத்தில் புகுந்து வாழை தோட்டம் முழுவதையும் மிதித்து துவம்சம் செய்தது.
    • பீர்க்கங்காய் தோட்டங்கள் தென்னை மரங்கள், வாழை மரங்கள், தக்காளி செடிகளை என அனைத்தையும் புகுந்து செடிகளின் மிதித்து நாசம் செய்துள்ளது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று வருடங்களாக இப்பகுதியில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.

    இந்த காட்டு யானைகள் கொங்கனபள்ளி சிகரளபள்ளி, நேர்லகிரி, எப்ரி வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வெளி வந்த 6-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அதிகாலை தோட்டகவாய் கிராமத்தில் ரமேஷ் என்பவரின் வாழைத் தோட்டத்தில் புகுந்து வாழை தோட்டம் முழுவதையும் மிதித்து துவம்சம் செய்தது.

    மேலும் அருகே உள்ள சுப்பிரமணி மற்றும் கோபால் என்பவருடைய பீர்க்கங்காய் தோட்டங்கள் தென்னை மரங்கள், வாழை மரங்கள், தக்காளி செடிகளை என அனைத்தையும் புகுந்து செடிகளின் மிதித்து நாசம் செய்துள்ளது.

    இந்த காட்டு யானைகளால் இப்பகுதியில் சுமார் ரூ.1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய பயிர்களை மிதித்து துவம்சம் செய்து சென்றுள்ளது.

    தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் இப்பகுதி விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வேதனை அடைந்து வருகின்றனர்.

    இந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தினமும் காட்டு யானைகள் இரவில் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் பொதுமக்களும், விவசாயிகளும் கடும் பீதியில் உள்ளனர்.

    Next Story
    ×