என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூச்சி மருந்து குடித்து பெண் சாவு
- மன உளைச்சலில் இருந்து வந்தார்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
செங்கல்பட்டு மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 67). இவரது மனைவி மல்லிகா (50). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
மல்லிகாவிற்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் மல்லிகா கடந்த 29-ந் தேதி வெம்பாக்கம் மேலனூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தார்.
அப்போது அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு மல்லிகா ஆளானார்.
பின்னர் பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேல் சிகிச்சை க்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஏழுமலை தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






