search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு 50 லட்சம் பக்தர்கள் வருகைதர வாய்ப்பு
    X

    கார்த்திகை தீப திருவிழா குறித்து கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு 50 லட்சம் பக்தர்கள் வருகைதர வாய்ப்பு

    • நவம்பர் மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னே ற்பாடு பணிகள் குறித்த ஆலோ சனைக் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

    கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 17-ந் தேதி வெள்ளிக்கிழமை அதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    23-ந் தேதி வியாழக்கி ழமை தேரோட்டம் நடைபெறும். 26-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.

    அன்று மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அண்ணாமலையார் கோவில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளியதும் 2668 உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    கார்த்திகை தீப திருவிழாவிற்கு 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நகராட்சி சார்பில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்தல், கிரிவலப் பாதை மற்றும் திருவண்ணா மலை நகரில் சாலைகள் அமைத்தல், தூய்மை பணி செய்தல், குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிரிவலப்பாதையில் உள்ள ஊராட்சி பகுதிகளில் தூய்மை பணி செய்தல், கழிப்பறை வசதி செய்தல், கண்காணிப்பு கோபுரம் அமைப்பது, காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணிகள், சட்டம் ஒழுங்கு பராமரித்தல், போக்கு வரத்தை சீர் செய்வது குறித்து ஆலோசிக்க ப்பட்டது. தீப தரிசனம் காண வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் மற்றும் ெரயில்களை இயக்குவது, மலை மீது ஏறும் பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்குவது, கிரிவல பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை முறைப்படு த்துதல், கோவில் மற்றும் கிரிவ லப்பாதையில் மருத்துவ முகாம்கள் அமைத்தல், அவசர மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு பணி வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு உறுப்பி னர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், நகராட்சி ஆணையாளர் ந.தட்சணா மூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×