search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்ஊழியர் வீட்டில் திருட்டு
    X

    கோப்புப்படம்

    மின்ஊழியர் வீட்டில் திருட்டு

    • மர்ம கும்பல் கைவரிசை
    • போலீசார் வழக்கு பதிவு விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே நடுக்குப்பம் கிராமம் மீசநல்லூர் ரோட்டை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 33). இவர் வந்தவாசி அடுத்த மாம்பட்டு மின்சார வாரியத்தில் லைன்மேனாக வேலை செய்து வருகிறார்.

    இவருடைய மனைவி சத்தியபிரியா (23) இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகின்றன. இவர்கள் இருவரும் நடுக்குப்பத்தில் வசித்து வருகின்றனர்.

    "சம்பவத்தன்று காலை ஏழுமலை வேலைக்கு சென்றுவிட் டார். சத்தியபிரியா வந்தவாசியில் உள்ள தட்டச்சு வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் கதவு திறந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகையை மர்ம கும்பல் திருட்டு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து தெள்ளார் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×