என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை மீட்க வேண்டும்
    X

    ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை மீட்க வேண்டும்

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • குளம் காணாமல் போவதற்குள்ளாக மீட்டு எடுத்து தர வேண்டும்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில் நீர் நிலை புறம்போக்கில் மிகப்பெரிய குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் உள்ள நீரை பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். மேலும் கோடை வெயில் காலத்தில் கால்நடைகள் குடிப்பதற்கு இந்த குளத்தில் உள்ள நீரை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது மிகப்பெரிய அளவில் இருந்த இந்த குளம் நாளடைவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குட்டையாக மாறியது.

    இதனால் கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றன. குளம் திடிரென காணாமல் போவதற்குள்ளாக மீட்டு எடுத்து தர வேண்டும் என்று கிராம பொதுமக்கள் பலமுறை கிராம நிர்வாக அலுவலரிடமும், கிராம ஊராட்சி மன்றத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டெடுத்து தர வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×