என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவி விஷம் குடித்து தற்கொலை
    X

    மாணவி விஷம் குடித்து தற்கொலை

    • கல்லூரியில் சேர சாதி சான்றிதழ் இல்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்.இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 17). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்காக பல்வேறு கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளார்.

    இவரிடம் குறிப்பிட்ட சாதிக்கான சான்றிதழ் இல்லாததால் ராஜேஸ்வரியால் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அவருடன் பள்ளியில் படித்த மாணவிகள் கல்லூரியில் சேர்ந்த நிலையில் அவரால் கல்லூரியில் சேர முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ராஜேஸ்வரி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மயங்கி கிடந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் மாணவி உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×