search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மன் கோவிலில் உண்டியல் பணம், பாத்திரங்கள் திருட்டு
    X

    அம்மன் கோவிலில் உண்டியல் பணம், பாத்திரங்கள் திருட்டு

    • போலீஸ் நிலையத்தில் புகார்
    • தடயங்களை சேகரித்து விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமம் ஈடியா தோப்பு பெரிய ஏரிகரை அருகே மாணிக்காத்தம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அவ்வழியே சென்ற சிலர் பார்த்து, கிராம பிரமுகர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம், 2 பித்தளை பானைகள் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து கொளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஜேம்ஸ் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் கோவிலுக்கு சென்று பார்வையிட்டு தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×