என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணுவ வீரர் தற்கொலை
    X

    ராணுவ வீரர் தற்கொலை

    • தொடர்ந்து மன வேதனையில் இருந்துள்ளார்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பொன்னுரங்கம் (வயது 60) இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    அனைவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. குடிக்கும் பழக்கமுடைய இவர் தொடர்ந்து மன வேதனையில் இருந்துள்ளார்.

    நேற்று இரவு வீட்டில் பின்பக்கமாக சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர்.

    ஆரணி டவுன் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×