search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
    X

    புதுப்பாளையத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்த காட்சி.

    வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

    • தனியார் திருமண மண்டபத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது
    • 37 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சாயத்துகளில் நடைபெற்ற வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

    புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 37 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர்கள் உட்பட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஓவர்சியர், பொறியாளர்கள், அனைத்து அதிகாரிகளும் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெற்ற திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள், செயல்படுத்த வேண்டிய அடிப்படை தேவைகள் உள்ளிட்டவைகள் குறித்து கலெக்டர் முழுமையாக ஆய்வு செய்தார்.

    அப்போது செய்து முடிக்கப்பட்ட பணிகள் செலவிடப்பட்ட தொகை குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் அரசு தரப்பில் இருந்து அறிவிக்கப்படும் திட்டங்கள் வளர்ச்சிப் பணிகள் மக்களுக்கு உடனுக்குடன் சென்று சேர வேண்டும் எனவும், மக்களுக்கு பயனுள்ள வகையில் திட்டங்களை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    Next Story
    ×