என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீ தடுப்பு குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம்
- அரசுப் பள்ளியில் நடந்தது
- நீர்நிலைகளில் குளிக்கும் போது உரிய கவச உடைகளை அணிந்து குளிக்க வலியுறுத்தல்
வந்தவாசி:
வந்தவாசி காமராஜர் நகரில் அமைந்துள்ள வந்தவாசி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் தீத்தடுப்பு குறித்து செயல் விளக்கம் நேற்று நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை சித்ரா தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியை கண்மணி வரவேற்றார்.
தீப்பற்றினால் எப்படி அணைப்பது, தீவிபத்திலிருந்து எவ்வாறு காத்துக் கொள்வது என்பது குறித்து வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.
மேலும் மாணவர்கள் நீர்நிலைகளில் குளிக்கும் போது பெற்றோர் துணையுடன் உரிய கவச உடைகளை அணிந்து கொண்டு குளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
Next Story






