search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாள் கோவில் கருட சேவை 8-ம் நாள் திருவிழா
    X

    பெருமாள் கோவில் கருட சேவை 8-ம் நாள் திருவிழா

    • குதிரை வாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    செங்கம்:

    செங்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீருக்மணி சத்யபாமா கதமத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் 10 நாள் கருட சேவை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நேற்று 8-ம் நாள் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    மூலவர்களுக்கு வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதேபோல உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×