என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூச்சி மருந்து குடித்து முதியவர் சாவு
- உடல்நிலை சரியாகாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த சுமங்கலி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 63). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமானதால் கடந்த 6-ந் தேதி வயல்வெளிக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் கன்னியப்பனை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியப்பனின் மகன் ஆனந்தராஜ் மோரணம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






