search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா
    X

    மாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா

    • பூங்கரக ஊர்வலம் நடந்தது
    • பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் சிவசக்தி வள்ளி முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டி, பூங்கரக ஊர்வலம் நடைபெற்றது.

    காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கோவிலில் கொப்பரையில் கூழ் ஊற்றி சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    இரவில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை புதுப்பேட்டை பகுதி மக்கள் சார்பில் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×