என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு அதிகாரி வீட்டில் விபத்து
- மனைவி உடல் கருகி பலி
- கணவருக்கு சிகிச்சை
ஆரணி:
ஆரணி டவுன், அருணகிரிசத்திரம், கண்ணப்பன் தெருவில் வசிப்பவர் சரவணன் (வயது 52). ஆரணி தீயணைப்பு நிலையத்தில் 'சிறப்பு நிலைய அலுவலராக' பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி ஜெய லட்சுமி(48). இவர்களுக்கு விக்னேஷ், ஜெகதீசன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று மதியம் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சரவணன், வீட்டில் 6 மாதமாக உபயோகப்படுத்தாமல் இருந்த ஸ்டவ் அடுப்பை எடுத்து அதில் மண்ணெண்ணை ஊற்றி வேகமாக பம்ப் செய்தார். இதில் எதிர்பாராத நிலையில் ஸ்டவ் வெடித்தது.
அந்த நேரத்தில் ஜெயலட்சுமி காஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். ஸ்டவ் வெடித்ததில் மண்ணெண்ணை சிதறி கியாஸ் அடுப்பில் பற்றி எரிந்தது.
இதனால் ஜெயலட்சுமி, சரவணன் ஆகி யோரது உடையில் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. சமையல் அறை மிகவும் சிறிதாக இருந்தது. இதனால் இருவராலும் வீட்டைவிட்டு வெளியேற முடி யவில்லை. இந்நிலையில் ஜெயலட்சுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
70 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சரவணனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் சரவணனை பரிசோதனை செய்து மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சரவணன் சிகிச்சை பெற்று வருகிறார்.






