என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் அதிகமாக பயன்படுத்தி வருவது தடுக்கப்படுமா?
    X

    கடைகளில் உள்ள பிளாஸ்டிக் கவர்களை படத்தில் காணலாம்.

    பிளாஸ்டிக் அதிகமாக பயன்படுத்தி வருவது தடுக்கப்படுமா?

    • மஞ்சள் பைகளை பயன்படுத்துங்கள் என வலியுறுத்தல்
    • பொதுமக்கள் கோரிக்கை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை வலியுறுத்தி விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

    பேருராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் மஞ்சள் பைகளை பயன்படுத்துங்கள் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் நபர்களுக்கு பிளாஸ்டிக் கவர்களையே கடை உரிமையாளர்கள் வழங்குகின்றனர்.

    இதனால் கண்ணமங்கலம் பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×