search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தொழில் கடன் வழங்கும் முகாம்
    X

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தொழில் கடன் வழங்கும் முகாம்

    • 20 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை வழங்கினார்
    • விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருக்க கூடாது என அறிவுரை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் வங்கியாளர்களுக்கான சிறப்பு ஆய்வுக் கூட்டம் மற்றும் தொழில் கடன் வழங்கும் முகாம் நடந்தது.

    முகாமிற்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கி மாவட்ட தொழில் மையம் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.2.61 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை வழங்கி பேசினார்.

    தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு வங்கிகள் துரிதமான முறையில் கடன் உதவிகளை வழங்க வேண்டும். அரசின் மானியத்துடன் கூடிய கடன் விண்ணப்பங்களை வங்கிகள் 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் வைத்திருக்க கூடாது என கூறினார்.

    இதில் மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவி, மகளிர் திட்ட இயக்குநர் சையித் சுலைமான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா தாட்கோ மேலாளர் ஏழுமலை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×