search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் கொள்முதல் மையங்களில் முன்பதிவு தொடங்கியது
    X

    நெல் கொள்முதல் மையங்களில் முன்பதிவு தொடங்கியது

    • 38 மையங்கள் மூலம் 4-ந் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-24 சொர்ணவாரி பருவத்தில் முதல் கட்டமாக 11 வட்டங்களில் 38 மையங்கள் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் 4-ந் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.

    திருவண்ணாமலை வட்டத்தில் வெளுக்கா னந்தல், கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் சோமாசிபாடி, அணுக்குமலை, உட்பட 38 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

    விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்றினையும், உதவி வேளாண்மை அலுவலரிடம் மகசூல் சான்றினை அடங்கலில் பெற வேண்டும்.

    நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் நேரடி கொள்முதல் மையத்திற்கு மேற்கு றிப்பிட்ட சான்றுகள், ஆதார். சிட்டா மற்றும் வங்கிகணக்கு புத்தக நகல் ஆகியவற்றினை நேரில் கொண்டு சென்று நெல் கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

    பதிவுகள் மேற்கொண்ட பின்னர் சம்மந்தப்பட்ட விவசாயியின் தொலைபேசி எண்ணிற்கு" வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டது" என்ற குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    பதிவு செய்த விண்ண ப்பங்களின் விவரம் தொடர்புடைய கிராம நிர்வாக அலு வலருக்கு அனுப்பப்பட்டு அவரால், பதிவு செய்துள்ள விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் நிராகரிப்பு செய்யப்படும்.

    விவசாயிகள் முன்பதிவு செய்வதில் சந்தேகம். சான்றுகள் பெறுதல், நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற காலதாமதம் அல்லது சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555, 9445245932 (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) மற்றும் 6385420976 (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) ஆகிய எண்களை தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்-அப் வாயிலாக தெரிவித்தாலோ அவை உடனடியாக சரி செய்யப்படும்.

    எனவே விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி தங்களின் நெல்லை நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறுமாறு திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ், தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×