என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்
    X

    தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன் கொடநகர் நல்ல தண்ணி குலத்தெருவை சேர்ந்தவர் உதயசூரியன் (வயது 61). தொழிலாளி. இவர் கடந்த 23-ந் தேதி பங்க் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.

    அதே பகுதி சேர்ந்த காசி (50) என்பவரும் பங்க் கடைக்கு வந்தார். அப்போது இவர்களுக்கு இடையே மது அருந்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

    பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனை கண்ட காசியின் மகன் அஜித்குமார் (25) சம்பவ இடத்திற்கு வந்தார். தனது தந்தையிடம் ஏன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாய் என்று உதய சூரியனிடம் கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அஜித்குமார்

    அருகில் இருந்த கட்டையை எடுத்து உதய சூரியனை சரமாரியாக தாக்கினார். இதில் உதயசூரியன் படுகாயம் அடைந்தார்.

    படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து உதயசூரியன் செய்யாறு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். மேலும் போலீசார் காசியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×