search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமண ஆசை காட்டி இளம்பெண் பலாத்காரம
    X

    திருமண ஆசை காட்டி இளம்பெண் பலாத்காரம

    • காலம் தாழ்த்தி வந்த வாலிபர்
    • அனைத்து மகளிர் போலீசில் புகார்

    செய்யாறு:

    வெம்பாக்கத்தைச் சேர்ந்த 28 வயதுடைய வாலிபர். சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 5 வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபர் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வாலிபரிடம் வற்புறுத்தினார்.

    அதற்கு வாலிபர் சிறிது நாட்கள் கழித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி காலம் தாழ்த்தி வந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் இது குறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×