என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
சாலை நடுவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்
- கடைகளுக்கு முன்பு வைத்திருந்த விளம்பர பலகை மற்றும் மேற்கூறைகளை அகற்றினர்
- அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்தால் கடும் நெரிசல் ஏற்படுகிறது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பஸ் நிலையம் அருகே காய்கறி மற்றும் மளிகை கடைகள் அதிக அளவில் உள்ளது. கண்ணமங்கலம் பஜார் என்று அழைக்கப்படும் இந்த பகுதி வேலூர் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் உள்ளது.
இங்கு சாலையோரம் கடை நடத்தி வரும் உரிமையாளர்கள், விளம்பர பலகைகள் மற்றும் நிழலுக்காக மேற்கூரைகள் அமைத்திருந்தனர்.
இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது.
எனவே விளம்பர பலகை மற்றும் மேற்கூறைகளை அகற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன்படி வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு முன்பு வைத்திருந்த விளம்பர பலகை மற்றும் மேற்கூறைகளை அகற்றினர்.
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை முற்றிலுமாக தடுக்கும் வகையில் சாலை நடுவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






