என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெயிண்டர் வீட்டில் 20 பவுன் நகை, பணம் கொள்ளை
    X

    பெயிண்டர் வீட்டில் 20 பவுன் நகை, பணம் கொள்ளை

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • தனிப்படை அமைத்து விசாரணை

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆராஞ்சி குமரகு டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40), பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி.

    சம்பவத் தன்று வயல் பணிக்காக செல்வி வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டிலிருந்த பணம், நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பிய செல்வி வீட்டின் பூட்டு உடை க்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது பூஜை அறை யில் இருந்த மரப்பெட்டியின் பூட்டை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.1 அரை லட்சம் ரொக்கம் ஆகிய வற்றை மர்ம கும்பல் திருடிச் சென்றது தெரியவந்தது.

    கேமரா காட்சிகள் ஆய்வு

    திருட்டுபோன நகைகளின் மதிப்பு ரூ.8 அரை லட்சம் இருக் கும்.

    இதுகுறித்து கீழ்பென்னாத் தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரனை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் 'கவ்வி' பிடிக்கவில்லை.

    பின்ன அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் தனி படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×