search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 தொழிலாளர்கள் ஏரியில் மூழ்கி பலி
    X

    2 தொழிலாளர்கள் ஏரியில் மூழ்கி பலி

    • மீன் பிடிக்க சென்றபோது பரிதாபம்
    • உடலை மீட்டு விசாரணை

    வாணாபுரம்:

    வாணாபுரம் அடுத்த குங்கிலியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 42) தொழிலாளி.

    இவரது உறவினரான விழுப்புரம் மாவட்டம் கண் டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (37) தொழிலாளி ஆகியோர் கொட்டையூரில் உள்ள ஏரிக்கு மீன்பிடிக்கசென்றனர்.

    நீண்ட நேரம் ஆகியும் இரு வரும் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர் கள் ஏரிக்குச் சென்று பார்த்தனர். ஆனால் அவர்களை அங்கு இல்லை.

    ஏரி கரையில் இருவரது உடைகள் மற்றும் செல்போன் செருப்பு உள்ளிட்டவைகள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அப்பகுதியில் அவர்களை தேடி பார்த்தனர். அவர்கள் கிடைக்காததால் வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைய டுத்து கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு முரு கன், இன்ஸ்பெக்டர் செல்வ. நாயகம், சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீ சார், தண்டராம்பட்டு தீய ணைப்பு வீரர்கள் ஏரிக்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் னெ்பதால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இன்று காலை உறவினர்கள் அந்த பகுதி மக்கள் தண்ணீரில் மூழ்கியவர்களை தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் உடலை மீட்க முடியவில்லை. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் ஏரியில் 2 பேரின் உடல் வாணாபுரம் போலீசாருக்கு மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து ஏறியில் மிதந்த 2 பேரின் உடல்களை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×