என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்
- உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது
- சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏக்கள் எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டனர்
திருவள்ளூர்:
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம் திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் மோதிலால், சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திருத்தணி தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.சந்திரன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்
.திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு உள்ள திருவள்ளூர், திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும், விளையாட்டுப் போட்டிகள், அன்னதானம் வழங்குவது, மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்குவது, ரத்ததான முகாம் நடத்துவது, ஏழைகளுக்கு வேட்டி சேலை வழங்குவது, கண் சிகிச்சை முகாம் நடத்துவது, அன்றைய தினம் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்குவது, கட்சி கொடியேற்றுதல் உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்வது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் திராவிடபக்தன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆர்.டி. இ.ஆதிசேஷன், துணை செயலாளர் டாக்டர் குமரன், பொருளாளர் மிதுன் சக்கரவர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கிறிஸ்டி (ஏ) அன்பரசு, மோ.ரமேஷ், மகாலிங்கம், கூளூர் ராஜேந்திரன், ஹரி கிருஷ்ணன், ரவி, இளைஞரணி நிர்வாகிகள், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேருர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.






