என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் வீட்டு பூட்டை உடைத்து நகை-செல்போன் திருட்டு
- வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (31). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 3-ந் தேதி தினேஷ் வீட்டை பூட்டிவிட்டு தனது தாயுடன் மைசூர் சென்றார்.
பின்னர் நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து அரை பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது.
மேலும் 3 லேப்டாப், ஒரு செல்போனும் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து தினேஷ் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






