search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பேத்கர் பிறந்தநாள் பேரணிக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்- திருமாவளவன் அறிவிப்பு
    X

    அம்பேத்கர் பிறந்தநாள் பேரணிக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்- திருமாவளவன் அறிவிப்பு

    • அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எழுச்சியுடன் கொண்டாட திட்டமிட்டு உள்ளனர்.
    • அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி-அணிவகுப்பு நடத்தி அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

    சென்னை:

    டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை ஏப்ரல் 14-ந்தேதி தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எழுச்சியுடன் கொண்டாட திட்டமிட்டு உள்ளனர்.

    அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி-அணிவகுப்பு நடத்தி அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தி உள்ளார்.

    இதனை ஒருங்கிணைக்கும் வகையில் மாவட்டம் வாரியாக மேலிட பொறுப்பாளர்களை திருமாவளவன் நியமித்து அறிவித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    சென்னை-திருமாவளவன், தமிழினியன், இரா.விக்ரமன், கடலூர்-சிந்தனை செல்வன், விழுப்புரம்-ரவிக்குமார் எம்.பி., மதுரை-ஏ.சி.பாவரசு, சேலம்-உஞ்சை அரசன், தர்மபுரி-தகடூர் தமிழ்செல்வன், திருவள்ளூர்-பாலசிங்கம்,

    வேலூர்-இளஞ்சேகுவேரா, தேனி-ஆற்றலரசு, கோவை-பாவலன், திருப்பத்தூர்-வன்னிஅரசு, காஞ்சிபுரம்-எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., நாகப்பட்டனம்-ஆளுர்ஷாநவாஸ் எம்.எல்.ஏ., செங்கல்பட்டு-பனையூர் பாபு எம்.எல்.ஏ.,

    திண்டுக்கல்-கனியமுதன், தூத்துக்குடி-கலைவேந்தன், விருதுநகர்-வில்லவன் கோதை, தஞ்சாவூர்-ரஜினிகாந்த், திருச்சி-இளமாறன், மயிலாடுதுறை-பாவாணன், சிவகங்கை-எல்லாளன், கிருஷ்ணகிரி-கோவேந்தன்,

    அரியலூர்-திருமார்பன், ராணிப்பேட்டை-நீலவானத்து நிலவன், ஈரோடு-சந்திரகுமார், கன்னியாகுமரி-பார்வேந்தன், தென்காசி-தமிழினியன், திருவாரூர்-குடந்தை தமிழினி, கள்ளக்குறிச்சி-சங்கத் தமிழன், திருவண்ணாமலை-விடுதலை செழியன், பெரம்பலூர்-விவேகானந்தன், புதுக்கோட்டை-இரா.கிட்டு,

    நெல்லை-செல்ல பாண்டியன், ராமநாதபுரம்-மாலின், கரூர்-தங்கதுரை, நாமக்கல்-ரத்தின நற்குமரன், திருப்பூர்-கரையரசன், நீலகிரி-நெப்போலியன், புதுச்சேரி-சிபிசந்தர் ஆகியோர் மேலிட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் மேலிட பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×