என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருக்குறள் ஒலிக்கும் புதிய மின்னணு கடிகாரம்- எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
- மகாத்மா காந்தி சிலைக்கு சந்தன மாலை அணிவித்து அங்கு அமைக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தார்.
- விழாவில் பூதலூர் சரக வட்டார தொடக்க கல்வி அலுவலர் ரமாபிரபா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. இதில் பேரூராட்சி தலைவர் மெய்யழகன், செயல் அலுவலர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் ரமணி, மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
முன்னதாக திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை, திருவள்ளுவ சிலை, தினமும் மணிக்கொருமுறை திருக்குறள் சொல்லும் புதிய கடிகாரம் அமைந்த மணிக்கூண்டு ஆகியவற்றை துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ திறந்து வைத்துமகாத்மா காந்தி சிலைக்கு சந்தன மாலை அணிவித்து அங்கு அமைக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தார்.
பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழாவில் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன், தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் பிரேமா, பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் மெய்யழகன், செயல் அலுவலர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் ரமணி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருக்காட்டுபள்ளி தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் பூதலூர் சரக வட்டார தொடக்க கல்வி அலுவலர் ரமாபிரபா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
தலைமையாசிரியர் முருகானந்தம், ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் தங்கதிருஞானசம்பந்தம் மற்றும்பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்