search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர்  முதுநகரில்  பரபரப்பு   பள்ளிக்கு சென்ற  2  மாணவர்கள் திடீர் மாயம்
    X

    கடலூர் முதுநகரில் பரபரப்பு பள்ளிக்கு சென்ற 2 மாணவர்கள் திடீர் மாயம்

    • கடலூர் முதுநகரில் பள்ளிக்கு சென்ற 2 மாணவர்கள் திடீர் மாயமனார்.
    • கடலூர் முதுநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் 2 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் செல்லங்குப்பம் சேர்ந்தவர் ஆறுமுகம் . இவரது 12 வயது மகன் கடலூர் செல்லங்குப்பத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை 8-ம் வகுப்பு மாணவன் வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். பின்னர் மாலை மாணவன் வழக்கம் போல் வீட்டிற்கு வருவது வழக்கம்.

    ஆனால் நேற்று வீட்டுக்கு வெகு நேரமாகியும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    மேலும் அதே 8-ம் வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவனும் விட்டுக்கு செல்லவில்லை. இதனை தொடர்ந்து இரண்டு மாணவர்களும் நண்பர்கள் என்பதால் வீட்டுக்கு செல்லாமல் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. மேலும் இரு வீட்டினரும் காணாமல் சென்ற மாணவர்களை தேடி வருகின்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் 2 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் முதுநகர் பகுதியில் 3 சிறுமிகள் வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று காணாமல் போனார்கள். இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையின் பேரில் 3 சிறுமிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் இரண்டு மாணவர்கள் திடீர் என காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×