என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் அலங்கார தேர்ப்பவனி.
வத்தலக்குண்டுவில் புனித தோமையார் ஆலய தேர் பவனி
- வத்தலக்குண்டு புனித தோமையார் பங்கு ஆலய திருவிழா கொடி பவனி, கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித தோமையார் பவனி நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
வத்தலகுண்டு:
வத்தலக்குண்டு- திண்டுக்கல் சாலையில் உள்ள பழமையான புனித தோமையார் ஆலய பங்குத் திருவிழாவின் 9-ஆம் நாளில் தேர் பவனி நடந்தது.
வத்தலக்குண்டு புனித தோமையார் பங்கு ஆலய திருவிழா கொடி பவனி, கொடியேற்றத்துடன் தொடங்கி திருப்பலி, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி நற்கருணைஆசீர், திருவிழா திருப்பலி மற்றும் அதனைத் தொடர்ந்து நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித தோமையார் பவனி நடைபெற்றது.
முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர் பவனி மீண்டும் புனித தோமையார் ஆலயம் வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை புனித தோமையார் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story






