என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்.
தேன்கனிக்கோட்டை பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரை
- பக்தி பாடல்களை பாடிக்கொண்டு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு களால் யாத்திரை தடைபட்ட நிலையில் இந்த ஆண்டு மீண்டும் புது உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக புறப்பட்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களான நொகனூர், கொத்தூர், அலேசீபம், ஜவுளகிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தேன்கனிக்கோட்டை இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டும் பாதயாத்திரையாக சனாதன தர்ம சைதன்ய பாதயாத்திரை குழு சார்பாக தலைவர் முனிவெங்கடப்பா தலைமையில் ஆண்கள் பெண்கள் உட்பட 150 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேன்கனிக்கோட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து குழந்தைகளுக்கு ராமர், ஆஞ்சநேயர் வேடமிட்டு நகரின் முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக வந்து பக்தி பாடல்களை பாடிக்கொண்டு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு களால் யாத்திரை தடைபட்ட நிலையில் இந்த ஆண்டு மீண்டும் புது உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக புறப்பட்டனர்.
பாதயாத்திரை குழுவினர் வருகின்ற 30-ம் தேதி திருப்பதி கோயிலை சென்றடைகிறார்கள். பக்தர்களை பாத யாத்திரை குழுவினர் பிரகாஷ், சீனிவாசன், கிருஷ்ணன் ஆகியோர் வழிநடத்திச் சென்றனர்.






