search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
    X

    லோகிதாசன்

    காதலியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

    • திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை தேனி கோர்ட்டு் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது
    • தேனி கோர்ட்டு் பரபரப்பு தீர்ப்பு

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கரட்டுப்பட்டியை சேர்ந்த அன்னக்கொடி மகன் லோகிதாசன்(34). கூலித்தொழிலாளி. இவர் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பையா மகள் ஜெயபிரதா(21) என்பவரை காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் லோகிதாசன் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயபிரதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லோகிதாசனிடம் முறையிட்டார்.

    அவ்வாறு திருமணம் செய்யாவிட்டால் காதல் விவகாரத்தை பெண் வீட்டில் கூறிவிடுவதாகவும் தெரிவித்தார். இதனால் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி கோவில்பட்டிக்கு சென்று ஜெயபிரதாவை லோகிதாசன் சமாதானம் செய்தார். அதன்பிறகு நைசாக அவரை ஆண்டிபட்டி கல்லூரிக்கு பின்புறம் உள்ள கழிப்பறைக்கு அழைத்துச்சென்றார்.

    அங்கு துப்பட்டாவால் ஜெயபிரதாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இதுகுறித்து ஜெயபிரதாவின் தந்தை கருப்பையா கொடுத்த புகாரின்பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தேனி மாவட்ட ஒருங்கிணைந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் லோகிதாசனுக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சாந்திசெழியன் தீர்ப்பளித்தார். அபராதத்தொகையை கட்ட தவறினால் ேமலும் ஒரு ஆண்டு சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். இதனைதொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


    Next Story
    ×