search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துணி துவைக்க சென்ற பெண் ஏரியில் மூழ்கி பலி
    X

    துணி துவைக்க சென்ற பெண் ஏரியில் மூழ்கி பலி

    • துணி துவைத்தபோது எதிர்பாராத விதமாக லாவண்யா தடுமாறி ஏரிக்குள் விழுந்துள்ளார்.
    • லாவண்யா பிணமாக மிதப்பது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு தகவல் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரகம் கொடிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் லாவண்யா (வயது 18).

    இவர் துணி துவைப்ப தற்காக அருகேயுள்ள கரடிமலை ஏரிக்கு சென்றுள்ளார். அங்கு துணி துவைத்தபோது எதிர்பாராத விதமாக லாவண்யா தடுமாறி ஏரிக்குள் விழுந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது.

    இதனால் நீரில் மூழ்கி லாவண்யா உயிரிழந்தார். துணி துவைக்க சென்ற பெண்ணை காணவில்லை என்று அவரது வீட்டில் தேடிவந்த நிலையில் ஏரியில் லாவண்யா பிணமாக மிதப்பது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×