என் மலர்
உள்ளூர் செய்திகள்

கணவனை பிரிந்த விரக்தியில் கிணற்றில் குதித்து உயிரை மாயத்த பெண்
- இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது.
- கணவர் பிரிந்து சென்றதால் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள செம்பரசன அல்லி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சுகன்யா (வயது25).
இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது.
இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் சுகன்யா கோபித்துக்கொண்டு கடந்த 4 மாதங்களாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
கணவனை பிரிந்த விரக்தியில் இருந்து வந்து சுகன்யா தனது தாய் வீட்டின் அருகேயுள்ள மரியம்மன்கோவில் பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






