என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கணவரை வெட்டிக்கொன்ற மனைவி
- மகாதேவன் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து மனைவியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
- மூத்த மகன் ராஜராஜசோழன் அம்மாவை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டதற்கு பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் கிழித்துள்ளார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவ ட்டம், மணல்மேடு காவல் சரகத்துக்கு உட்பட்ட கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன் இவரது மகன் மகாதேவன் (53) இவரது மனைவி அமுதா (37) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகாதேவன் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதும் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளாக கூறப்படுகிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு மனைவியின் வலது கையை உடைத்துள்ளார். இந்நிலையில் இரவு மனைவியிடம் 500 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு குடித்துவிட்டு இரண்டு பீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் மூத்த மகன் ராஜராஜசோழன் அம்மாவை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டதற்கு பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் கிழித்துள்ளார். தடுத்த மனைவியை அரிவாளால் வெட்டை முயன்றபோது. அதனை பறித்து மனைவி, கணவனை கழுத்தில் வெட்டியுள்ளார்.
இதில் சம்பவ இடத்தி லேயே மகாதேவன் உயிரி ழந்தார். பின்னர் தன் மகனுடன் மணல்மேடு காவல் நிலையத்திற்குசென்று கணவனைகொன்று விட்டதாக சரணடைந்து ள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து ள்ளனர். கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்