search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழிகளை முறையாக தூர்வார வேண்டும்
    X

    யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழிகளை முறையாக தூர்வார வேண்டும்

    • வன அதிகாரியிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
    • விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

    ஊட்டி:

    முதுமலை- ஸ்ரீமதுரை எல்லையோரம் ஏற்கனவே உள்ள அகழிகள் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருகிறது.

    எனவே அகழியை முறையாக தூர்வார வேண்டும். இதுகுறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.

    இந்தநிலையில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முதுமலை-ஸ்ரீமதுரை எல்லையோரம் உள்ள அகழியை தூர்வார வேண்டும் என ஊராட்சி தலைவர் சுனில் தலைமையில் பொதுமக்கள் கூடலூர் வனச்சரகர் ராஜேந்திரனை சந்தித்து முறையிட்டனர்.

    தொடர்ந்து முதுமலை கார்குடி வனச்சரகர் விஜயனை சந்தித்து இதே கோரிக்கையை வைத்தனர். அதற்கு அவர் அரசு நிதி ஒதுக்கியவுடன் அகழியை தூர்வாரும் பணி நடைபெறும் என உறுதி அளித்தார்.

    அதுவரை காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம். தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

    Next Story
    ×