என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி வீட்டில் நகைகள் திருட்டு
    X

    தொழிலாளி வீட்டில் நகைகள் திருட்டு

    • தனது மனைவியுடன் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
    • தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போனது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஹட்கோ அருகேயுள்ள கதிரேபள்ளி பகுதியை சேர்ந்தவர் குடியப்பா (வயது 45). இவர் தனது மனைவியுடன் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

    சம்பவத்தன்று இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 27 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போனது தெரிய வந்தது.

    இது குறித்து குடியப்பா கொடுத்த புகாரின்பேரில் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×